பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருக்கு பிரியாவிடை!

Date:

தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம் ஹம்சா அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நேற்று ரியாத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் சார்பில், ரியாத்தில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பௌத்த, இந்து,கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தூதுவருக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் சினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தூதுவர் பி.எம். அம்சா இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் 29 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர அனுபவத்துடன் இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) உறுப்பினராவார்.

நவம்பர் 2021 இல் சவூதி  அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ஜூலை 2019 முதல் அக்டோபர் 2021 வரை பொருளாதார விவகார அமைச்சில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.

ஜனவரி 2016 முதல் ஜூன் 2019 வரை ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான துருக்கி குடியரசின் இலங்கைத் தூதுவராகவும், ஆகஸ்ட் 2012 முதல் ஜூலை வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும் பணியாற்றினார்.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...