நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்

Date:

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை பேராயர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என பேராயரின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மீள் மதிப்பீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழுவை பேராயர் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழு முதற் தடவையாக இன்றையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...