நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்

Date:

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை பேராயர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என பேராயரின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மீள் மதிப்பீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழுவை பேராயர் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழு முதற் தடவையாக இன்றையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...