நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்

Date:

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை பேராயர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என பேராயரின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மீள் மதிப்பீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழுவை பேராயர் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழு முதற் தடவையாக இன்றையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...