மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (24) மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செலயகத்தின் உள்ளக வளாகம் மற்றும் வெளி வளாகங்களில் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
 இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலாபுண்ணியமூர்த்தி, பிரதம உள்ளக கணக்காய்வாளர் இந்திராமோகன், மாவட்ட பொறியியலாளர் ரீ. சுமன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்டசெயலககணக்காளர் எம். வினோத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...