வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்

Date:

வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன்    இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும்   மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை பகுதிகளை தனியார் அத்துமீறி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் கால்நடைகளுக்கான மேச்சல் தரை இல்லாது போயுள்ளது.
இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைவளர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக வவுனியா பத்தினியார்மகிழங்குளம்,ஓயார்சின்னக்குளம், கதிர்காமசின்னக்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவாக தீர்த்துத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தார்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...