வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்

Date:

வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன்    இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும்   மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை பகுதிகளை தனியார் அத்துமீறி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் கால்நடைகளுக்கான மேச்சல் தரை இல்லாது போயுள்ளது.
இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைவளர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக வவுனியா பத்தினியார்மகிழங்குளம்,ஓயார்சின்னக்குளம், கதிர்காமசின்னக்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவாக தீர்த்துத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தார்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...