அக்கரபத்தனை – போபத்தலாவ வனப் பகுதியில் கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

Date:

அக்கரபத்தனை – போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேட்டையாடுவோரினால் இந்த கம்பி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுத்தை கம்பிகளுடன், போபத்தலாவ அரச விளை நிலத்தின் கிழக்கு பகுதியிலுள்ள உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு மேல் வீழ்ந்திருந்த நிலையில், மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 அடி நீளமான 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க மலையக பகுதிக்கு உரித்தான சிறுத்தையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலில் பாரிய காயங்கள் காணப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களத்தின் மிருக வைத்திய அதிகாரிகள், அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, சிறுத்தையை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை, சிகிச்சைகளுக்காக நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போபத்தலாவ அரசாங்கத்திற்கு சொந்தமான வனப் பகுதியில் மான் மற்றும் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாளர்களினால் இந்த கம்பி கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கம்பியிலேயே சிறுத்தை சிக்குண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...