அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

Date:

அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர்.
இந்த நோயால் “பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடைகள் மூலமாகவோ பரவக்கூடும்” என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் சுகாதார மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இன்று(04) தெரிவித்தனர்.
வைத்தியர் ஹேமா வீரகோனின் கூற்றுப்படி, ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று குணமாகும்.
பூஞ்சை தொற்றுநோய்களுக்கு, சரியான அளவை பரிந்துரைத்த சிகிச்சையை ஆறு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகையில், வைத்தியர் ஹேமா வீரகோன், சிகிச்சை காலத்திற்கு இடையில் நிறுத்தப்படுவது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...