இலங்கையின் பேசும் பொருளாக மாறியுள்ள யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்து!

Date:

இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியின் சர்ச்சைக்குரிய கருத்தே இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது அதன்படி ,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதன்படி ,தனது குடும்பத்தினர் மற்றும் அவரது சொத்துக்கள் குறித்து தனது கிராமவாசிகளிடம் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாக்யாய அபேரத்ன எனும் யுவதி தெரிவித்தார்.

இறக்குவானையை அண்மித்துள்ள சிங்கராஜ வனப் பகுதியில் இடம்பெற்று வரும் காடழிப்பு குறித்து, குறித்த அந்த நிகழ்ச்சியில் பாக்யா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அந்த தகவலை அடுத்து, பாக்யா தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அவர் சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகில் சூழல் மாசடையும் விதத்தில் கட்டுமானப் பணியில் உள்ள ஒரு ஹோட்டல் பற்றி குறித்த நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பில் பொலிஸார் தனது வீட்டிற்கு வந்து அப்பகுதியில் ஏற்படும் சூழல் மாசடைவு குறித்து விசாரித்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குறித்த ஹோட்டல் கட்டப்படும் நிலத்தின் உரிமையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், காலையிலும் மாலையிலும் தான் காணும் சுற்றுச்சூழலின் மாசடைவு குறித்து பொலிஸாரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கராஜ அருகே ஆனையிறவு கட்டப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் குறித்த அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய கருத்தின் பின்னர், சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...