இலங்கையில் என்னை கண்காணிக்கின்றார்களா ? கனடா உயர்ஸ்தானிகர் கேள்வி

Date:

இலங்கையில் தன்னை கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே கனடா உயர்ஸ்தானிகர் இது குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் கண்காணிக்கப்படுகின்றறேனா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தனிப்பட்ட சந்திப்புகள் எவ்வாறு ஊடகங்களிற்கு தெரியவந்தன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடா உயர்ஸ்தானிகர் இலங்கையில் உள்ள இரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களை சந்தித்தமை குறித்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...