இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வடிவம் நாளை

Date:

தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்தின் இறுதி நகல் வரைவு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி ஆராயும் முறைசாரா மேலதிகக் கூட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் இறுதி அமர்வு இன்று இடம்பெற்று தீர்மானத்தின் இறுதி நகல் வடிவம் நாளை வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை இலங்கை அரசு எதிர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்துள்ள அவதான அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ள இலங்கை அரசு அதன் அடிப்படையிலான எந்த ஒரு தீர்மானத்தையும் ஏற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் குழு மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரிட்டனின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே இது சம்பந்தமான மேலதிக் முறைசாரா கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த முறைசாரா கூட்டங்களின் போது இலங்கை தரப்புக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பி இருந்தன. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளே இந்தக் கூட்டங்களின் போது இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இந்த முறைசாரா கூட்டத்தொடரின் போது மேற்குலக நாடுகளும் குறிப்பாக ஸ்கண்டிநேவிய பிராந்திய நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. சீனா, ரஷயா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...