இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று

Date:

இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர். கடந்த இரண்டு வருட காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று பொதுத் தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறத் தவறியதால் பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன் கலைத்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ தனது கூட்டணிக் கட்சிகளின் போதிய ஆதரவைப் பெறத் தவறியதால் அடுத்தடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் கூட மிக மோசமான ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் என பல குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலேயே நெத்தன்யாஹூ தேர்தலை சந்திக்கின்றார். அவருக்கு எதிரான சட்டபூர்வமான விசாரணைகள் இன்னும் இருவாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய தேர்தல் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...