சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி

Date:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று திங்கட்கிழமை  காலை 10 மணியளவில் விசேட கவனயீர்ப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னாரில் இடம் பெற்றது.
விழிர்ப்புணர்வுக்கு என பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட ஊர்தியில் சமூகத்தில் பெண்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் பொறுப்புக்களை ஒப்பனை செய்தவாறும் பெண்கள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக மன்னார் நகரப்பகுதியை வந்தடைந்த குழுவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
குறிப்பாக பெண்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்ததுடன் பொது இடங்கள் மற்றும் பேருந்துகளிலும் காட்சிப்படுத்தினர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தினர் இளைஞர் யுவதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார்   நிருபர்

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...