சுறுசுறுப்பு மிக்க சுயஸ் கால்வாயில் போக்குவரத்து நெரிசல்

Date:

உலகில் மிகவும் பிரபலமான சுறுசுறுப்பு மிக்க நீர் நிலையான சுயஸ் கால்வாயில் இன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் றொட்டர்டாம் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக கொள்கலன் தாங்கி கப்பலான எவர் கிவன் என்ற கப்பல் சுயஸ் கால்வாயின் வழமையான கப்பல் போக்குவரத்து பாதையை விட்டு விலகி கால்வாயின் பக்கவாட்டு பகுதியில் உரசும் வகையில் சென்றதால் அதற்கு பின்னால் வந்த பல கப்பல்கள் தமது பயணத்தை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் வழியாக மத்தியதரைக் கடல் பகுதியை இணைக்கும் பிரதான நீர்வழிப்பாதையே சுயஸ் கால்வாயாகும். இதுவே உலகின் மிகவும் சுறுசுறுப்பான கப்பல் பயணப் பாதையாகும். தினசரி சுமார் 50க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்தக் கால்வாயைக் கடந்து செல்கின்றன. குறிப்பிட்ட கப்பலில் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பே அது வழமையான பாதையை விட்டு விலக பிரதான காரணமாகும். அந்தக் கப்பல் பாதையை விட்டு விலகிய சிறிது நேரத்தில் பின்னால் வந்த சுமார் 15 கப்பல்களின் பயணம் தடைபட்டுள்ளது.

இந்தக் கப்பல் இரண்டு லட்சம் தொன் எடை கொண்டது. அதன் நீளம் 400 மீற்றர்களாகும். அகலம் 59 மீற்றர்களாகும். இந்தக் கப்பல் 20 அடி நீளம் கொண்ட 20 ஆயிரம் கொள்கலன்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லக் கூடியது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...