தந்தையை நோக்கி ஓடி வந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மியன்மார் பொலிஸ்

Date:

மியன்மாரில் ஏழு வயதே ஆன சிறுமியை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கொல்லப்பட்ட மிகவும் இளவயது சிறுமி இவராவார்.

கின் மியோ சிட்டி என்ற சிறுமியே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கையில்,
மண்டேலா நகரில் உள்ள தமது வீட்டில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை சிறுமி தந்தையை நோக்கி ஓடி வருகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்களில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 261 இற்கும் அதிகம் என அரசியல் கைதிகளுக்கான உதவிக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...