தரமற்ற தேங்காய் எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவு

Date:

தரமற்ற தேங்காய் எண்ணை என மாதிரி பரிசோதனையில் ஒப்புவிக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்க பணிப்பாளர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணையில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி தரமற்ற எண்ணையை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அதனை மீள் ஏற்றுமதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.வி. ஹரிப்பிரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள 13 கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெயில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவவல் வெளியிட்டது.

இதனை அடுத்து இது குறித்து பல தரப்பினர் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த தேங்காய் எண்ணெய் தொகை தரமற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டதை அடையாளம் கண்டுக்கொண்டதாக தர நிர்ணய சபை தெரிவித்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணை தொடர்பில் தற்போதும் பல தரப்பினரால் விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...