பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! | ஸ்தலத்திலே பெண்ணொருவர் பலி |

Date:

பதுளை − பசறை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான், இந்த பஸ்ஸிலேயே நாளாந்தம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எனினும், பஸ் விபத்துக்குள்ளான கடந்த 20ம் திகதி, நொடி பொழுதில் அந்த பஸ்ஸில் ஏறுவதற்கு இம்ரான் கானுக்கு முடியாது போயுள்ளது.

இம்ரான் கான் வழமையாக ஏறும் இடத்திற்கு பஸ், சுமார் 7:15 அளவில் வந்துள்ளது.

பஸ்ஸை நிறுத்துமாறு கைகளை காண்பித்து கோரிய போதிலும், பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை நிறுத்தாது பயணித்துள்ளதாக இம்ரான் கான் தெரிவிக்கின்றார்.

பஸ்ஸின் சாரதி தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பயணித்ததை தான் அவதானித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

பஸ் நிறுத்தாது பயணித்து, சில நொடிகளில் தன் கண் முன்பாகவே பள்ளத்தில் குடைசாய்ந்து, விபத்துக்குள்ளாகியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Popular

More like this
Related

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...