புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்! | டெல்லி விவசாயிகள் எச்சரிக்கை

Date:

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகையிட தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். நேற்று மத்திய பிரதேச மாநிலம், சிவப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி போராட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கூ, திக்ரி மற்றும் காசிப்பூரில் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 104வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த நிலையில் தங்களது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த போவதாக ராகேஷ் தியாகத் கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சென்று நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தயாராக இருப்பதாக தியாகத் எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லி நகருக்குள் புகுந்தவை வெறும் 3500 டிராக்டர்கள் தான் என்று தியாகத் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேவைப்பட்டால், பல லட்சம் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர்களாக இருப்பவர்கள் அதிகாரமற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...