புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமை இனவெறி நிகழ்ச்சி | முஸ்லீம் கவுன்சில் தெரிவிப்பு

Date:

புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது. இது இனவெறி நிகழ்ச்சி நிரல் என இலங்கையின் முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த விரும்புகின்றனர் என ஹில்மி அகமட் அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளார்.
புர்காவை பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்கு உள்ள உரிமையாக இதனை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த 350 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர், தற்போது அவர்கள் புர்காவையும் மத்ரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்ராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...