புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளமை இனவெறி நிகழ்ச்சி | முஸ்லீம் கவுன்சில் தெரிவிப்பு

Date:

புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது என அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது. இது இனவெறி நிகழ்ச்சி நிரல் என இலங்கையின் முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

அவர்கள் தாங்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த விரும்புகின்றனர் என ஹில்மி அகமட் அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளார்.
புர்காவை பெண்கள் தங்களிற்கு விருப்பமான உடையை அணிவதற்கு உள்ள உரிமையாக இதனை கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த 350 பேரின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கைகளை மீறி அவர்கள் தகனம் செய்தனர், தற்போது அவர்கள் புர்காவையும் மத்ரசாக்களையும் தடை செய்ய முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்ராசாக்களின் நோக்கத்தை போன்ற நோக்கத்தை கொண்ட பௌத்த கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...