முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

Date:

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது—சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்றமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் |
புதிய காத்தான்குடி நிருபர்

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...