மேல் மாகாணத்தில் நேற்று 1158 சந்தேக நபர்கள் கைது

Date:

மேல் மாகாணத்தில் நேற்று ஏழாம் திகதி பொலிஸார் மேற்கொண்ட விஷேட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது 1158 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபன்து தென்னக்கோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விஷேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. நேற்றுக் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை இந்தத் தேடுதல் இடம்பெற்றது.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 584 பேர் ஏற்கனவே நீதிமன்றங்களால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள். 44 பேர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்பு பட்டவர்கள், மேலும் 441 பேர் மேசடிக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...