வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

Date:

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக்க ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

51 வயதாகும் சனத் ஜயசூரிய, 35 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றமை தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...