வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

Date:

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக்க ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

51 வயதாகும் சனத் ஜயசூரிய, 35 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றமை தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...