அநுராதபுரத்தில் வேகமாக பரவும் தோல் நோய் தொற்று

Date:

அனுராதபுர பகுதியில் Tinea என்ற பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் இன்று (04) தெரிவித்தனர்.
இந்த நோயால் “பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றி படிப்படியாக பரவும், Tinea பூஞ்சை தொற்று தொடுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடைகள் மூலமாகவோ பரவக்கூடும்” என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பாலியல் சுகாதார மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் இன்று(04) தெரிவித்தனர்.
வைத்தியர் ஹேமா வீரகோனின் கூற்றுப்படி, ஒரு தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று குணமாகும்.
பூஞ்சை தொற்றுநோய்களுக்கு, சரியான அளவை பரிந்துரைத்த சிகிச்சையை ஆறு வார காலத்திற்கு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகையில், வைத்தியர் ஹேமா வீரகோன், சிகிச்சை காலத்திற்கு இடையில் நிறுத்தப்படுவது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
முஹம்மட் ஹாசில்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...