அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் சில தினங்களுக்கு இந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் நிலைமை மேலும் மேசமடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிட்னி நகரின் மிகப் பெரிய நீர்த் தேக்கம் அடுத்த சில நாற்களுக்கு நிரம்பி வழியும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.