இன்று முதல் இலங்கை முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்!

Date:

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகதொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறுகிறார்.

இதனால் மோட்டார் சைக்கிள் ஆய்வு நடவடிக்கை இன்று முதல் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சோதனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை ஆராயப்படும்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் தற்போது சுமார் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 56% மோட்டார் சைக்கிள்கள்.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 16% ஆகும் என்றார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...