இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வடிவம் நாளை

Date:

தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்தின் இறுதி நகல் வரைவு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி ஆராயும் முறைசாரா மேலதிகக் கூட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் இறுதி அமர்வு இன்று இடம்பெற்று தீர்மானத்தின் இறுதி நகல் வடிவம் நாளை வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை இலங்கை அரசு எதிர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்துள்ள அவதான அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத தீர்மானத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ள இலங்கை அரசு அதன் அடிப்படையிலான எந்த ஒரு தீர்மானத்தையும் ஏற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் குழு மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரிட்டனின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே இது சம்பந்தமான மேலதிக் முறைசாரா கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த முறைசாரா கூட்டங்களின் போது இலங்கை தரப்புக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பி இருந்தன. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளே இந்தக் கூட்டங்களின் போது இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இந்த முறைசாரா கூட்டத்தொடரின் போது மேற்குலக நாடுகளும் குறிப்பாக ஸ்கண்டிநேவிய பிராந்திய நாடுகளும் இலங்கை தொடர்பான தீர்மானம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. சீனா, ரஷயா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...