இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று

Date:

இஸ்ரேலில் கடந்த இரண்டு வருட காலத்தில் நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர். கடந்த இரண்டு வருட காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று பொதுத் தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறத் தவறியதால் பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன் கலைத்து மீண்டும் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ தனது கூட்டணிக் கட்சிகளின் போதிய ஆதரவைப் பெறத் தவறியதால் அடுத்தடுத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் கூட மிக மோசமான ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் என பல குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலேயே நெத்தன்யாஹூ தேர்தலை சந்திக்கின்றார். அவருக்கு எதிரான சட்டபூர்வமான விசாரணைகள் இன்னும் இருவாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய தேர்தல் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...