ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் | இலங்கை வேண்டுகோள்

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால் தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி சிஏ சந்திரப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை இராணுவமயப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளுக்கு அரசதுறையில் இணைந்துகொள்வதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலவரம் மோசமடைவது குறித்து முன்கூட்டிய ஆரம்ப எச்சரிக்கைகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள சந்திரபெரும ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சுதந்திரமானதில்லை பக்கச்சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் வழக்கில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில்  சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது மரணித்த...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

எழுத்து: காலித் ரிஸ்வான் இன்று, செப்டம்பர் 23ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம்...

இலங்கை -துருக்கி இடையிலான விவசாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துகின்ற துருக்கி குடியரசுடன் பரஸ்பர...

அரச சேவையை இலகுபடுத்தும் Government SuperApp!

அரச சேவைப் பணிகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’...