கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

Date:

தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் சயெலாளர் பிரிவில் பொன் தீவு கண்டல் கிராமத்தில் உள்ள சென் அண்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானம் புனரமைப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை 10.25 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏஸ்ரான்லி டி மெல் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா.சறிஸ்கந்தகுமார் , நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி , மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிரின்ஸ் லெம்பேட் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் அலிகான் செரீப், மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...