கிளிநொச்சியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு

Date:

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை 2 வயது ஆண் குழந்தை சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.

இதேவேளை ஏனைய இரு குழந்தைகளையும் தேடி வந்த நிலையில் அவர்களும் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் இடம்பெற்றது.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது 3 பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு குறித்த தாயார் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் 5 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள் தொடர்பில் பொலிசாரும், கிராம மக்களும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது குறித்த இரு குழந்தைகளும் கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருவதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...