கொழும்பு – டாம் வீதியில் மர்மப் பொதி | சடலம் என பொலிஸார் சந்தேகம்

Date:

கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது.

தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாம் வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பொதிக்குள் காணப்படுவது என்னவென்பது தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும், அது தொடர்பிலான விசாரணைகளுக்காக தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் டாம் வீதி பொலிஸார் கூறினர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...