கொழும்பு – டாம் வீதியில் மர்மப் பொதி | சடலம் என பொலிஸார் சந்தேகம்

Date:

கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது.

தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாம் வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பொதிக்குள் காணப்படுவது என்னவென்பது தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும், அது தொடர்பிலான விசாரணைகளுக்காக தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும் டாம் வீதி பொலிஸார் கூறினர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...