சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே 31இல்

Date:

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி ஆரம்பமாகும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டில் அமைச்சராகப் பதவி வகித்த போது இரவு நேரத்தில் ராஜகிரிய பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மேசமான காயங்களுக்கு ஆளாயினர். அவர்களுள் ஒருவர் இன்னமும் நடமாட முடியாத வகையில் சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முன்னாள் அமைச்சர் சார்பில் அன்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டமை பின்னர் தெரிய வந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய விசாரணைகளை அடுத்து சம்பிக்க ரணவக்க குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரம் சம்பந்தமான பூர்வாங்க ஆட்சேபனை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 27ம் திகதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...