டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு ஒரேநாளில் வந்த 200 தொலைபேசி அழைப்புக்கள் ஏன் ?

Date:

டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு வந்த 200 அழைப்புக்கள்.
டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை அடுத்து அதை அடையாளம் காணும் வகையில் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி இருந்தனர். அன்றைய தினம் டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு அந்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் சுமார் 200 தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

உள்ளுரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த அழைப்புக்கள் தனக்கு வந்ததாக டேம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த 200 அழைப்புக்களும் தமது அன்புக்குரிய பெண்களைத் தேடி வரும் நபர்களிடம் இருந்தே வந்துள்ளன. மகள், சகோதரி, மனைவி என காணாமல் போன உறவினர்களைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களே சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் தொடர்பு கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் இவர்கள் பற்றிய விசாரணைகள் தேங்கி உள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...