தென்னை மரத்தை வெட்டினால் கிடைக்கும் தண்டனை

Date:

எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டினால் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மரங்களை வெட்டுவதற்கெதிராக உள்ள சட்டத்தில் புதிய மரமொன்றை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்குவதற்கான திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கம்பஹா – நைவல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அண்மைக் காலமாக தேங்காய் விலை அதிகரித்துச் சென்றமை, கட்டட மற்றும் இதர தேவைகளுக்காக தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...