மட்டக்களப்பு மாவட்டத்தில் 22928 பேர் பரீட்சைக்குத் தோற்றினர் | கொரோனா அச்சத்தலுக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையிலக.பொ.த. சா தரப் பரீட்சைகள் ஆரம்பம்

Date:

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் கல்விப பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இன்று பரீட்சைகள் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகின.

மட்டக்களப்பு மவட்டத்தில் இம்முறை 22928 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.இதற்கென 159பரீட்சை நிலையங்களும் 14 இணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பரீட்சை இணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 12671 பேரும் பாடசாலை பரீட்சார்த்திகள் 10257பேரும் பரீட்சைக்குத் தோற்றினர்.11900பெண் மாணவிகளும் 11028 ஆண் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மவட்டத்தில் சகல பரீட்சை நிலையங்களிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர்.கைகளை கழுவி சமுக இடைவெளிகள் பேணப்பட்டு பரீட்சை மண்டபத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
பரீட்சை நிலையங்களில் அதிகமான பொலிசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதுடன் பொதுச் சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு நிருபர்

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...