முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

Date:

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது—சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்றமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் |
புதிய காத்தான்குடி நிருபர்

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...