முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

Date:

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது—சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்றமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் |
புதிய காத்தான்குடி நிருபர்

Popular

More like this
Related

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும்...

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...