வடகொரியா இன்று இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது

Date:

ஜப்பான் கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பைடன் பதவிக்கு வந்தபின் வடகொரியா நடத்தியுள்ள பிரதான ஏவுகணை சோதனையாக இது கருதப்படுகின்றது இத்தகைய சோதனைகளை நடத்துவது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் அந்த தடையை மீறி வடகொரியா இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகின்றது ஜப்பானும் தென் கொரியாவும் உடனடியாக இந்த சோதனையை கண்டித்துள்ளன ஒரு சில தினங்களுக்கு முன்னர் வடகொரியா சாதாரண

ஏவுகணைகள் இரண்டை மஞ்சள் கடல் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது ஆனால் இன்றைய சோதனை ஜப்பானிய கடல் பரப்பை நோக்கி நடத்தப்பட்டுள்ளது இருப்பினும் இதன் ஒரு தூசு கூட தன்னுடைய
ஆளுகை பரப்புக்கு உட்பட்ட எல்லைக்குள் விழவில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது. இதே நேரம் வடகொரியா அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்

எந்த வகையில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதையே இந்த சோதனைகள் நிரூபித்து உள்ளதாக அமெரிக்க பசுபிக் ராணுவ கட்டளையகம் அறிவித்துள்ளது .

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...