ஹஜ்ஜுல் அக்பர் ஏன் கைது செய்யப்பட்டார் | DIG அஜித் ரோஹண!

Date:

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பில் ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் வஹாபிசம் மற்றும் ஜிஹாத் தொடர்பான கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் தெமட்டகொடை பகுதியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல – முருதவெல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவராவர்.

ஜமா – அத்தே இஸ்லாமிய அமைப்பினால் வெளியிடப்படும் ‘அல் ஹஸனாத்’ சஞ்சிகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அடிப்படைவாத எண்ணங்களை தோற்றுவிக்கும் வகையில் குறித்த சந்தேக நபர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தமை மற்றும் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...