மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் இந்த வனவிலங்கு தொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலங்கானது இலங்கையில் அரிதாக காணப்படுவதாகவும் அழிந்து போகக் கூடிய ஓர் இனமாகவும் இருப்பதாக தெரிவித்தார் இதனை நிக்கவேரடிய வன ஜீவராசிகள் காரியாலயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததன் பின்னர் காட்டில் விட தீர்மானித்துள்ளனர்.
இந்த விலங்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடு வந்து சேர்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
A.W.M. பர்ஹான் ஹோரம்பாவ