SLBC தலைமைத்துவ பிரதிநிதிகளை விலகுமாறு ஊடகத்துறை அமைச்சர் உடனடி அறிவிப்பு

Date:

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பணிப்புரை விடுத்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான நிபுன வஹாலதந்திரி, காமினி விஜேசேகர உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களையும் உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

நுவரெலியா – ரதெல்ல பகுதியிலுள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு சொந்தமான காணியொன்றை, தனியார் துறைக்கு குத்தகை அடிப்படையில் அனுமதியின்றி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...

எல் நினோ காலநிலையின் தாக்கம் ஒக்டோபர் முதல் அதிகரிக்கும்.

எல் நினோ காலநிலை மாற்றம் ஆரம்பமாகி, பலவீனமான மட்டத்தில் இருந்த போதிலும்...