இன்று முதல் இலங்கை முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்!

Date:

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகதொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறுகிறார்.

இதனால் மோட்டார் சைக்கிள் ஆய்வு நடவடிக்கை இன்று முதல் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சோதனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் தரம் மற்றும் அவற்றின் இயங்கும் நிலை ஆராயப்படும்.

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் தற்போது சுமார் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 56% மோட்டார் சைக்கிள்கள்.

பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 16% ஆகும் என்றார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...