உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

Date:

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

0

SHARES

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

நான்காவது முறையாக, 14 கொலைகளுடன், அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் 10 பேர் இறந்தனர்.

பாகிஸ்தானில் ஒன்பது, இந்தியாவில் எட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் தலா நான்கு, நைஜீரியா மற்றும் யேமனில் தலா மூன்று. ஈராக், சோமாலியா, பங்களாதேஷ், கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் கொலைகள் நடந்தன.

2019ஆம் ஆண்டைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் இறப்பு எண்ணிக்கை 1990 களில் இருந்ததைப் போலவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலைகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையின் விவரங்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெட்டு சம்பவங்களில் 16 வெவ்வேறு நாடுகளில் இந்த கொலைகள் நடந்ததாக ஐ.எஃப்.ஜே தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...