காபுல் குண்டு வெடிப்பில் மூவர் பலி | 11 பேர் காயம்

Date:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். அரசாங்க ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி ஒன்றை இலக்கு வைத்து வீதி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் தலிபான் அமைப்புடன் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும், தலிபான்களின் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் ஆப்கான் அரசு, தலிபான் அமைப்பு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தனது ஊழியர்களின் பயணத் தேவைக்காக வாடகைக்கு அமர்த்தியுள்ள பஸ்ஸை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...