தந்தையை நோக்கி ஓடி வந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மியன்மார் பொலிஸ்

Date:

மியன்மாரில் ஏழு வயதே ஆன சிறுமியை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து கொல்லப்பட்ட மிகவும் இளவயது சிறுமி இவராவார்.

கின் மியோ சிட்டி என்ற சிறுமியே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கையில்,
மண்டேலா நகரில் உள்ள தமது வீட்டில் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை சிறுமி தந்தையை நோக்கி ஓடி வருகையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்களில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவதாக ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 261 இற்கும் அதிகம் என அரசியல் கைதிகளுக்கான உதவிக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...