மன்னாரில் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

Date:

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னாரில் உள்ள இளைஞர்களால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) காலை   இரத்ததான  முகாம்  சிறப்பாக இடம் பெற்றது.
பசியில்லா மன்னார் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் தலைமையில் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடன் குறித்த இரத்ததான முகாம்  மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த சேகரிக்கும் பகுதியில் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் அதிகளவான இளைஞர்கள் , இளைஞர் கழக அங்கத்தவர்கள் பசி இல்லா மன்னார் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
குறித்த அமைப்பினால் தொடர்சியாக பிரதேச ரீதியில் இரத்த தான நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...