முகாமையாளரை மாற்றககோரி மட்டக்களப்பு .இ.போ.ச.(டிப்போ) ஊழியர்கள் ஆர்பாட்டம்

Date:

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது—சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்றமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் |
புதிய காத்தான்குடி நிருபர்

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...