வவுனியா நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராம மக்களின் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட | கு.திலீபன்

Date:

வவுனியா வடக்கு நெடுங்கேணி காஞ்சூரமோட்டை கிராம மக்களின்
பிரச்சினையை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று
பார்வையிட்டுள்டளார்.

நெடுங்கேணி மருதோடை கிராம சேவகர் பிரிவில் காஞ்சூரமோட்டை
நாவலர் பண்னை கிராமம் கடந்த அரசாங்க காலத்தில் மீள்குடியேற்றம்
செய்யப்பட்ட நிலையில் கிராமத்துக்கான அடிப்படை வசதிகள் எதுகும் செய்து
கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளிற்கு
இணங்க வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட
அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கு.திலீபன் நேரில் சென்று பொது
மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
சென்ற நிலையில் ஜனாதிபதியினால் வனவள திணைக்களத்திற்கு தகவல் வழங்கி
அந்த கிராமத்துக்குரிய மின் இணைப்புக்கு தடங்களாய் இருந்த மரங்களை
அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மரங்கள் அகற்றப்பட்டு மின்னினைப்புக்குரிய ஆரம்ப கட்ட
வேலைகள் இடம்பெற்று வருவதை பாராளுமன்ற உறுப்பினர் நேரில்
சென்று பொதுமக்களையும் அந்த இடத்தினையும் பார்வையிட்டு கருத்து
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

 

 

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...