விஷேட அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

Date:

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களால் மேற்கொள்ளபபட்ட விஷேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் வெவ்வேறு பகுதிளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கைது செய்யபட்ட 16 வயது மதிக்கதக்க இளைஞனிடமிருந்து 3 கிலோ 85 கிராம் கஞ்சாவினையும் கைது செய்யப்பட்ட 61 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் இருந்து1 கிலோ 890 கிராம் கஞ்சாவினையும் வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நிருபர்
துவாரகன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...